வீதிப்பாதுகாப்பு தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் சித்திரப்போட்டி 2024

"வாகன விபத்துக்களற்ற நாளைய தினத்திற்காக பாடசாலைகளிலிருந்து அணிவகுப்போம்" என்ற தொனிப்பொருளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வருடாந்தம் நடாத்தப்படும் சித்திரப்போட்டி இம்முறை வடமாகாண அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் பிள்ளைகளுக்காகவும் போக்குவரத்து துறைக்கு சம்மந்தமான வீதிப்பாதுகாப்பு என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட தலைப்புக்களில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியானது தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான மட்டங்களில் 03 பிரிவுகளின் கீழ் இரண்டு சுற்றுக்களாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. இறுதிச்சுற்றிற்கு தகுதிபெறும் போட்டியாளர்கள் சித்திரங்களை நேரடியாக வரைய வேண்டும். இதற்கான திகதி பின்பு அறிவிக்கப்படும். பிரிவு அடிப்படையில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் இறுதிப்போட்டியில் வகுப்பு தர அடிப்படையில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பூர்த்தி செய்யப்பட்ட சித்திரங்கள் பதிவுத்தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 2024.02.29 அன்று அல்லது அதற்கு முன் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zonal Education Office,Vavuniya North © 2022