நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டை முன்னிட்ட பேச்சுப்போட்டி
நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டை முன்னிட்டு பேச்சுப்போட்டி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை, கந்தையா கார்த்திகேசு அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டை கடந்த மூன்று வருடங்களாக நடாத்தி வருகின்றது. இவ்வாண்டும் வைகாசி மாதம் நான்காவது மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளின் க.பொ.த உயர்தர தங்கள்
வகுப்பு மாணவர்களிடையே பேச்சுப்போட்டி ஒன்றினை நடத்தவுள்ளது.