புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இதவடிவம் 1 இடம் பெற்றது.

புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் 23 , 24 திகதிகளில் இதவடிவம் 1 நிகழ்நிலையில் இடம் பெற்று, 25 ஆந் திகதி இன்று பரீட்சை இடம் பெற்றது. 117 ஆசிரியர்கள் நிகழ்நிலையில் பங்குபற்றிய போதும் 111 ஆசிரியர்கள் பரீட்சைக்குத் தகுதி பெற்றிருந்தனர்.

முதலாவது வினைத்திறன் தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 30 ஆசிரியர்கள் இன்று பூர்த்தி செய்துள்ளனர்.

வளவாளர்களாக, முகாமையாளர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களும் விரிவுரையாளர் திரு. வி.முரளி அவர்களும் திரு. எ. பரமவேல் (பிரதான களஞ்சியக் காப்பாளர்- (RDHS) அவர்களும் ஆசிரியர்களை நெறிப்படுத்தினர்.

தொழில்நுட்ப உதவி வழங்கிய வவுனியா வடக்கு CRC குழுமத்தினருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றி.

Zonal Education Office,Vavuniya North © 2022